யுஎஸ் மருத்துவமனையில் 8 பேர் சுட்டுகொலை
நியூயார்க்: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிராம மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கியுடன் வந்த மர்ம மனிதன் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கார்தேஜ் என்ற கிராமம் உள்ளது. சுமார் 2 ஆயிரம் வசிக்கும் இந்த கிராமத்தில் பைன் லேக் மருத்துவமனை உள்ளது.
இந்நிலையில் நேற்று இந்த மருத்துவமனைக்கு துப்பாக்கியுடன் வந்த ராபர்ட் ஸ்டீவர்ட் என்ற 45 வயது நபர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சூட்டுள்ளார். இதில் 6 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். இரண்டு பேர் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தனர்.
இவர்கள் அனைவரும் வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவருக்கு 98 வயது. 4 பேருக்கு 80 வயது, இருவருக்கு 70 வயது. இவர்கள் 7 பேரும் சிகிச்சைக்கு வந்தவர்கள். இவர்களை தவிர்த்து பணியில் இருந்த நர்ஸ் ஒருவரும் பலியாகி உள்ளார். இவர்களுக்கும் அந்த கொலைகாரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் துப்பாக்கி சூடு நடப்பதை கண்ட ஹெலன் ஆலிவ் என்ற நர்ஸ் அங்கிருந்த படுக்கை ஒன்றின் பின்னர் மறைந்து கொண்டு போலீசுக்கு போன் செய்துள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்த வந்த ஜஸ்டின் கார்னர் என்ற போலீஸ் அதிகார் கொலைகாரனை பிடிக்க முயன்றார். அப்போது இருவருக்கும் இடையில் துப்பாக்கி சூடு ஏற்பட்டது. அதில் போலீஸ் அதிகாரிக்கு லேசான காயமடைந்தார். கொலைகாரன் ராபர்ட் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
யுஎஸ்சில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவது அங்கிருப்பவர்கள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது.