அரசு பஸ்களில் சேட்டிலைட் டிவி- சோதனை
தென்காசி: அரசு பஸ்களில் பயணிகளின் பொழுதுபொக்கிற்காக கலர் டிவிக்கள் அமைக்கப்பட்டு சினிமா, பாட்டுகள், கமெடி ஒளிபரப்பபட்டு வருகிறது. டிவிடி கேசட் மூலம் இவை ஒளிபரப்பப்படுகிறது.
அரசு பஸ்களில் உள்ள பெரும்பாலான டிவிக்கள் பழுதாகிவிட்டன. இதனால் பெரும்பாலான பஸ்களில் டிவி கூண்டு மட்டுமே காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் பயணிகல் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் பயணிகளை கவரும் வகையில் தனியார் பஸ்களை மிஞ்சும் அளவிற்கு அரசு பஸ்களில் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு செய்ய அரசு திட்டமிட்டது. அதாவது தனியார் விளம்பர நிறுவனங்கள் மூலம் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் மட்டும் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பப்படும்.
இது தனி டிவி சேனல் போன்றது. வேறு டிவி சேனல்கள் இதில் தெரியாது. தனியார் நிறுவனம் ஒளிபரப்பும் சினிமா, பாட்டு, கமெடி மற்றும் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை அரசு பஸ்களில் உள்ள டிவிக்களில் பார்த்து ரசிக்கலாம்.
இதற்கான பணிகள் முழு விச்சில் நடந்து வருகிறது. தற்போது செங்கோட்டை, பாபநாசத்திலிருந்து மதுரை மற்றும் தொலைதூர இடங்களுக்கு செல்லும் அரசு பஸ் சிலவற்றில் டிவிக்கள் பொருத்தப்பட்டு சோதனை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தனியார் விளம்பர நிறுவனம் மூலம் இனி அரசு பஸ்களில் சேட்டிலைட் டிவிக்கல் ஓளிபரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாகதான் பென் டிரைவ் முலம் அரசு போக்குவரத்து கழகம் சோதனை ஒளிபரப்பு என்ற பெயரில் சினிமா படங்கள், பாடல்கல், காமெடி ஒளிபரப்பு செய்து வருகிறது.
சேட்டிலைட் மூலம் ஒளிபரப்பு செய்யும்போது விளம்பரதாரர்கள் நிகழ்ச்சிகள் அதிகளவில் இடம் பெறும். டிவி சேனல் புதிதாக ஒளிபரப்பபடுவது போல அரசு பஸ்களில் மட்டும் இனி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சோதனை ஒளிபரப்பு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.