For Daily Alerts
Just In
டாடா நானோ காரை ஓட்ட மாட்டேன்-மம்தா
கொல்கத்தா: டாடா நானோ காரை ஓட்ட மாட்டேன். அதில் பயணம் செய்ய மாட்டேன் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரிலிருந்து டாடா நிறுவனம் இடம் பெயர மம்தா நடத்திய மிகப் பெரிய போராட்டமே முக்கிய காரணம் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் கொல்கத்தாவில் நிருபர்கள் அவரிடம், நானோ கார் வெளியாகி விட்டதே, அதை ஓட்டுவீர்களா, அதில் பயணம் செய்வீர்களா என்று கேட்டனர்.
அதற்கு மம்தா, நானோ காரை நான் ஓட்ட மாட்டேன், பயணம் செய்யவும் மாட்டேன். அது மக்களின் ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கார்.
எந்தக் காரில் போக வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார் மம்தா.
Story first published: Friday, April 3, 2009, 17:34 [IST]