சென்னை-பெங்களூருக்கு சிறப்பு வாராந்திர ரயில்
சென்னை: கோடை விடுமறையை முன்னிட்டு சென்னை-பெங்களூருக்கு இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்ப்டடுள்ளது.
கோடை விடுமுறை துவங்கவிருப்பதை அடுத்து சென்னை- பெங்களூர் இடையில் வாராந்திர ரயில் ஏப்ரல் 12 முதல் இயக்கப்பட இருக்கிறது.
வாரந்தோறும் சென்னையில் ஞாயிறு இரவு 11.30க்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மறுநாள் காலை 7.30க்கு பெங்களூர் வந்து சேரும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலால்பேட்டை, ஒயிட்பீல்டு, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் கன்டோன்மன்ட் ஆகிய இடங்களில் நிற்கும்.
வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் பெங்களூரில் இருந்து இந்த ரயில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை சென்றடையும்.
இந்த கோடை சிறப்பு ரயில் வரும் ஜூன் 29ம் வரை இயக்கப்படும் என தெரிகிறது. இதில் 1 இரண்டடுக்கு ஏசி பெட்டி, 3 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உட்பட மொத்தம் 18 பெட்டிகள் இருக்கும்.