மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது
சென்னை: மனைவியைக் கொன்று, அவரது இறந்த உடலுடன் உறவு கொண்ட கொடூர கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அருகே பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சுபாஷ் கிருஷ்ணன். 34 வயதான இவர் வேலை இல்லாமல் சுற்றி வந்தார். இவரது மனைவி சாந்தி. 28 வயதாகும் இவர் தள்ளுவண்டியில் பழம் விற்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
வியாழக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார் சுபாஷ் கிருஷ்ணன். மனைவியை உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் சாந்தி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
குடும்பத்தைக் காப்பாற்றாமல் பொறுப்பின்றி வரும் உனக்கு இதுதான் ரொம்ப முக்கியம் என்று கோபத்துடன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் கிருஷ்ணன், சாந்தியை அடித்துள்ளார்.
அதில் கீழே விழுந்தார் சாந்தி. அப்படியும் ஆத்திரம் தீராத சுபாஷ் கிருஷ்ணன் கயிற்றை எடுத்து சாந்தியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
பின்னர் குடி வெறியில் இறந்து போன மனைவியின் உடலுடன் உறவு கொண்டு தனது வெறித்தனத்தைத் தணித்துக் கொண்டார். மேலும் சாந்தியின் இறந்து போன உடல் முழுவதையும் கடித்தும் ஆத்திரத்தைத் தணித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து போய் விட்டார். தங்களது தாயார் பிணமாகக் கிடந்ததைப் பார்த்த சாந்தியின் 2 குழந்தைகள் தங்களது தாய் மாமாவுக்குப் போன் செய்து கூறியுள்ளனர்.
அவர் போலீஸாருக்குகத் தகவல் கொடுக்கவே விரைந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி தலைமறைவான சுபாஷ் கிருஷ்ணனைக் கைது செய்தனர்.