For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீபெரும்புதூர்- ஏ.கே.மூர்த்தியை சந்திக்கும் டி.ஆர்.பாலு

By Staff
Google Oneindia Tamil News

T.R.Baalu
ஸ்ரீபெரும்புதூர்: தென் சென்னை தொகுதியில் இதுவரை போட்டியிட்டு வந்த டி.ஆர்.பாலு, முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூருக்கு மாறி வந்துள்ளார்.

1941ம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டையில் பிறந்தவர் பாலு.

தந்தை பெயர் ராஜு தேவர். இரு மனைவியர் உள்ளனர். 1957ம் ஆண்டு முதல் திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

முதல் முறை 996ம் ஆண்டு மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். 1999ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார்.

2004 முதல் தற்போது வரை கப்பல், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கிறார்.

மிசா காலத்தில் ஒரு ஆண்டு சிறையில் இருந்தார். கட்சி சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 20 முறைக்கு மேல் சிறை சென்றவர்.

1986-92-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

இப்போது ஸ்ரீபெரும்புதூரில் பாமகவின் ஏ.கே.மூர்த்தியை சந்திக்கிறார்.

இருவருக்கும் பண, படை பலம் சரிசமமாக உண்டு என்பதால் இந்தத் தொகுதி இரு பெரும் 'தலைகளின்' மோதலை சந்திக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X