அதிமுக பிரமுகருக்கு சீட்-விழுப்புரம் வி.சி. அதிருப்தி
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சிதம்பரம் தொகுதியில் கட்சி தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் வேலாயுதமும் போட்டியிட இருக்கிறார்கள்.
இதில் வேலாயுதம் அதிமுகவில் முக்கிய பிரமுகராக இருந்தவர். விழுப்புரம் தொகுதியில் அவருக்கு தான் அதிமுக சீட் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்ததாம்.
இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு கொடுக்கல் வாங்கலில் பலரிடமும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அம்மாவட்டச் செயலாளர் தகுந்த ஆதாரங்களுடன் மேலிடத்தி்ல் போட்டு கொடுக்க, அவரது வாய்ப்பு கடைசி நிமிடத்தில் பறிபோனதாம். இதையடுத்து வேலாயுதம், திருமாவளவனை சந்தித்து சரண்டர் ஆனதாக தெரிகிறது.
இவரை வெற்றி பெற வைத்தால் இவர் யாருக்கு விசுவாசமாக இருப்பார் என்று கட்சி நிர்வாகிகள் பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தொகுதியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளிடம் அவரை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளாரம் திருமா.