தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி-ப.சி
டெல்லி: என்டிடிவிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில்,
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஜமாத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய 4 தீவிரவாத அமைப்புகளும் முன்பு தனித்தனியாக செயல்பட்டு வந்தன. இப்போது அவை கூட்டு சேர்ந்துவிட்டன.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்க இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
4 இயக்கங்கள் ஒன்று சேர்ந்துள்ளதால் தாக்குதல் அபாயம் அதிகம். இதையடு்த்து நாடெங்குமே உஷார் நிலையில் இருக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளோம்.
தீவிரவாதிகளின் உரையாடல்களை இடைமறித்தபோது லஷ்கர் தீவிரவாதிகள் காஷ்மீரில் இருப்பது உறுதியானது. ஆனால், தலிபான்கள் ஊடுருவி விட்டதாக சொல்லப்படுவதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், அவர்கள் ஊடுருவ முயல்வது உண்மை.
இந்தத் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவது ஏதாவது ஒரு நாடா, அல்லது நாட்டின் ஒரு அமைப்பா, அல்லது நாடுகளைக் கடந்த அமைப்பா என்று தெரியவில்லை என்றார்.