For Daily Alerts
Just In
பங்கு வர்த்தகம்-ரிலையன்ஸுக்கு அதிக லாபம்
மும்பை: கடந்த வாரம் மூன்று நாட்கள்தான் பங்குச் சந்தை இயங்கியது. மஹாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளியையொட்டி இரு தினங்கள் பங்குச் சந்தை மூடப்பட்டது.
ஆனால் இயங்கிய மூன்று நாட்களும் நல்ல ஏற்றத்தில் இருந்தது சந்தை. அதிக லாபத்தில் கைமாறின பங்குகள்.
இதனால் ரிலையன்ஸ் உள்ளிட்ட 10 முக்கிய நிறுவனங்கள் ரூ.33000 கோடியை லாபமாக சம்பாதித்துள்ளன. இவற்றில் 6 நிறுவனங்கள் அரசுத் துறைக்குச் சொந்தமானவை.
லாபம் ஈட்டிய நிறுவனங்களில் வழக்கம்போல ரிலையன்ஸ் முதலிடம் பெற்றுள்ளது. ரூ. 11, 103 கோடியை லாபமாக சம்பாதித்துள்ளது.
இதன் மூலம் முகேஷ் அம்பானியின் இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ. 2,72,747 கோடியாக உயர்ந்துள்ளது.
அதிக நஷ்டம் கண்ட நிறுவனங்களி்ல் முதலிடத்தில் உள்ளது பாரத ஸ்டேட் வங்கி.
Comments
Story first published: Sunday, April 12, 2009, 17:04 [IST]