அதிமுக-தயாநிதியை எதிர்க்கு சிவகங்கை ஜின்னா
எஸ்.எம்.கே.முகமதுஅலி ஜின்னாவுக்கு வயது 49. இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி புதூர். தற்போது சென்னை சேப்பாக்கத்தில் குடியிருந்து வருகிறார்.
தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.
சென்னை 80-வது வட்ட அ.தி.மு.க. பொருளாளராகவும், சேப்பாக்கம் பகுதி கழக துணைசெயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
தற்போது தென்சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக உள்ளார்.
சென்னையில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். காபிபோசா வழக்குகளில் திறம்பட வாதாடக் கூடியவர். வக்கீல் தொழிலுடன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு சைபுநிஷா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்தமகன் பெயர் மகாபீர் முகமது(20), இரண்டாவது மகன் பெயர் அசாரூதின்(18).
முக்கிய கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட முதல் முஸ்லீம் வேட்பாளர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் ஜின்னா.