வெற்றி பெற செய்யுங்கள்-திமுகவினரிடம் திருமா
ஜெயங்கொண்டம்: என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று திமுகவினரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் திருவமாவளவன். இதையொட்டி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் திருவமாவளவன் பேசுகையில்,
சிதம்பரம் தொகுதியில் கடலூர் மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளும், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 சட்ட மன்ற தொகுதிகளும் அடங்கியுள்ளது.
இதுவரை நான் இரண்டு முறை எம்பி தேர்தலில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்துள்ளேன். மூன்றாவது முறையாக நான் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றேன். என்னை இந்த முறை வெற்றி பெறச் செய்யுங்கள்.
நான் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதே போல சிறுத்தைகளும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
எனக்கு இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை. வரும் 26, 27 தேதிகளில் சின்னம் ஒதுக்கப்பட்டுவிடும் என்றார்.