For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை, நெல்லை: கருணாநிதி-ஜெ சுறுசுறு பிரச்சாரம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை & நெல்லை: திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 26ம் தேதி கோவையில் முதல்வர் கருணாநிதி பிரச்சாரம் செய்கிறார். அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்.

வ.உ.சி. பூங்கா அல்லது சிவானந்தா காலனியில் இந்த பொதுக் கூட்டம் நடக்கவுள்ளது.

நெல்லையில் ஜெயலலிதா நாளை பிரச்சாரம்:

நெல்லை, தூத்துக்குடியில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி்முக பொது செயலாளர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார்.

நாளை பகல் 12.45க்கு தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்படரில் பாளை ஆயுதப்படை மைதானத்திற்கு வருகிறார். பின்னர் காரில் வந்து நெல்லை டவுன் வாகையடிமுனையில் நடக்கும் பொதுகூட்டத்தில் வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்துப் பேசுகிறார். கூட்டம் முடிந்த பின் ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் செல்கிறார். அன்றிரவே மதுரை சென்று தங்குகிறார்.

மறுநாள் தென்காசி இந்திய கம்யூ வேட்பாளர் லிங்கத்தை ஆதரித்து பகல் 1 மணிக்கு சங்கரன்கோவி்ல் வடக்கு ரத வீதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் தூத்துக்குடியில் நடக்கும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

27ம் தேதி பொள்ளாச்சியில்...

அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏப்ரல் 27ம் தேதி பொள்ளாச்சி வருகிறார். அன்று இரவு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்தும், திருப்பூர் வேட்பாளர் சிவசாமியை ஆதரித்தும் பேசுகிறார்.

மே 3ம் தேதி கோவையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். அதே நாளில் மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் நீலகிரி மதிமுக வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து பேசுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X