மீண்டு வருகிறது இந்தியப் பொருளாதாரம்
அதே போல எஃகு துறையிலும் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. இதனால் பொருளாதாரம் மீட்சிக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டதாக பொருளியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் சிமெண்ட் விற்பனையின் வளர்ச்சி 9 சதவிகிதம் மட்டுமே. ஆனால் ஒரே மாதத்தில் இது 12.75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இந்தத் தகவலை நாட்டின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் இணைத் தலைவர் ராகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
அதேபோல இரும்பு விற்பனையிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3.8 சதவிகித வளர்ச்சியை இந்தத் துறை சாதித்துள்ளது.
இந்தத் துறைகளின் வளர்ச்சியானது பொருளாதார மீட்சியின் அறிகுறியாகத்தான் பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டின் இரணாடாவது காலாண்டில் இதைவிட இரு மடங்கு வளர்ச்சியை எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர் நிபுணர்கள்.
மத்திய அரசின் இரும்பு எஃகுத் துறை செயலாளர் ரஸ்தோகியும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.