புலிகள் விவகாரத்தை விடுங்கள்-கூறுகிறார் சாமி
சென்னை: திமுகவும், அதிமுகவும் தங்களது பிரசாரத்திலிருந்து விடுதலைப் புலிகள் விவகாரத்தை கைவிட வேண்டும். மாறாக தமிழகத்தின் முன்னேற்றம், சட்டம் ஒழுங்கு, மக்கள் பிரச்சினைகள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழக கட்சித் தலைவர்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் வெளி்ப்பாடே, கருணாநிதியின் முன்னுக்குப் பின் முரணான பேச்சு.
விடுதலைப் புலிளுக்கும், அவர்களது தலைமைக்கும் என்ன நேரிட்டாலும் அதுகுறித்து தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள் என்ற உண்மையை அவர்கள் உணர வேண்டும்.
கருணாநிதியும், ஜெயலலிதாவும், விடுதலைப் புலிகள் விவகாரத்தை பிரசாரத்தில் சேர்க்க்க கூடாது. மாறாக, நல்லாட்சி, வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, மக்கள் பிரச்சினைகள் குறித்துதான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் சாமி.