முழுஅடைப்பு: தமிழக ஐடி நிறுவனங்கள் மூடல்
இந்த அறிவிப்பு வெளியானதுமே தமிழகத்திலுள்ள 2,80,000 ஐடி பணியாளர் மத்தியிலும் பெரும் குழப்பம் நிலவியது.
பெரிய ஐடி நிறுவனங்களான இன்போஸிஸ், டிசிஎஸ், விப்ரோ மற்றும் சத்யம் போன்றவை இன்று முழுமையாக மூடப்பட்டுவிட்டன. மாநிலத்தின் ஆளும் கட்சியே நடத்தும் பந்த் இது என்பதால் எதற்கு ரிஸ்க் என்ற மனநிலையில் இந்த முடிவுக்கு வந்தன.
அதே நேரம் இந்த நிறுவனங்களின் கால்சென்டர்கள் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தன. வார நாட்களில்தான் அதிக அளவு வாடிக்கையாளர் அழைப்புகள் வரும் என்பதால் இவை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது.
மற்ற ஐடி நிறுவனங்களிலும்கூட பெரும்பாலானவை இன்று மூடப்பட்டுவிட்டன. போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுவிட்ட சூழலில் ஊழியர்கள் பலரும் வேலைக்கு வர முடியாது என தெரிவித்து விட்டதால் இந்த நிறுவனங்கள் மூடப்பட்டன.
சில சிறிய ஐடி நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களை மட்டும் பணிக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டன. ஆனால் ஆண்களை பணிக்கு வரச் சொல்லிவிட்டன.