''என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள்''...
24.04.2009 அன்று 6.00 மணிக்கு கோவை சோமனூர் இருந்து வந்த 90A பேருந்து தென்னம்பாளையம் அருகே வரும்போது இரண்டு சக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த மூன்று வாகனங்களை ஒதுக்கி விட்டு நிற்காமல் சென்றது.
அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு லேசான காயத்துடன் தப்பித்தார்கள். பின்னர் பேருந்தை துரத்தி சூலூர் பிரிவு என்ற இடத்தில் நிறுத்தினார்கள். சூலூர் காவல் துறைக்கு தெரிவித்தும் யாரும் வரவில்லை. பின்னர் உக்கடம் பேருந்து அலுவலகத்திற்கு தெரிவித்தும் அவர்களிடம் பொறுப்பான பதில் எதுவும் வரவில்லை.
போனில் பேசிய அதிகாரி நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்று கூறி போனை வைத்து விட்டார். சுமார் ஒரு மணி நேரம் வாக்குவாதம் நடந்து பின்னர் பேருந்தை ஓட்டுனர் எடுத்து சென்று விட்டார்.
பொறுப்பில்லாமல் பதில் கூறிய பேருந்து அலுவலக அதிகாரிகளையும், தகவல் கொடுத்து வெகுநேரம் ஆகியும் வராததால் காவலர்களையும் பொதுமக்கள் திட்டி தீர்த்தனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார் பாபுராஜ்.
அதிகாரிகளே இப்படி இருந்தால்.. தவறு செய்யும் ஊழியர்களை யார் தண்டிப்பது?
போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு தான் கண் திறக்க வேண்டும்.