போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்: இலங்கைக்கு ஜி.8 அமைப்பு கோரிக்கை
ரோம்: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என ஜி 8 நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், போர்ப் பகுதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அது கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் இணைந்துள்ள ஜி 8 அமைப்பின் சார்பில் ரோம் நகரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், போர் நடைபெறும் பகுதியில் தற்போது சிக்கியுள்ள மக்களுடைய அவல நிலை மற்றும் போரால் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் தொடர்பாக நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள் அமைப்பு பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பொதுமக்களின் உயிரிழப்புக்களை மேலும் தவிர்க்கும் வகையில் அவசியமான நடவடிக்கைகளை இருதரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளது.