For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1000 நானோ கார்களுக்கு ஆர்டர் கொடுத்த நிறுவனம்

By Staff
Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீ சிமென்ட்ஸ் நிறுவனம் ஆயிரம் டாடா நானோ கார்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இந்த கார்களை வாங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீ சிமென்ட்ஸ் நிறுவனம் ஆயிரம் நானோ கார்களை புக் செய்ய ரூ. 42 லட்சத்துக்கான் செக் அந்நிறுவனத்தின் டீலரிடம் கொடுத்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் பாங்கூர் கூறுகையில்,

பூமி தினத்தை முன்னிட்டு 1000 நானோ கார்கள் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். இதில் 200 உயர் தர மாடல்களாகவும், மீத 800 நடுத்தர ரக மாடல்களாகவும் இருக்கும்.

இந்த காரின் மைலேஜூம் நன்றாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு இந்திய நிறுவனம் என்ற முறையில் சுற்றுப்புற சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் இந்த காரை வாங்க இருக்கிறோம். இது டாடா நிறுவனத்திடம் பேசுகையில், அவர்கள் நாங்கள் நேரடியாக தர முடியாது.

டீலர்களிடம் ஆர்டர்களை கொடுங்கள் என கூறிவிட்டது. இதையடுத்து அவர்கள் அதிக ஆர்டர்கள் கொடுத்தாலும் முன்னுரிமை தரப்படாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

கம்ப்யூட்டர் உதவியுடன் குலுக்கல் நடக்கும் என்பதால், எத்தனை கார் ஒதுக்கப்படும் என்பது பின்னர் தான் தெரியும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X