சென்னை-நாகர்கோவில், தூத்துக்குடி ரயில் நேரம் மாற்றம்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் இரு வாராந்திர ரயில்களின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே மாற்றி அமைத்துள்ளது.
இந்த இரு ரயில்களின் புதிய அட்டவணையை நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டது. அதன்படி,
சென்னை-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் வரும் மே 3ம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்து வந்தடையும்.
வரும் மே 4ம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் மதியம் 1.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
சென்னை-தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில் வரும் மே 6ம் தேதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
மே 7ம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும் என தெரிவித்துள்ளது.