For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் அதிமுக பேச்சாளர் மீது திமுக தொண்டர் செருப்பு வீச்சு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பேசி கொண்டிருந்த அதிமுக பேச்சாளர் மீது திமுக தொண்டர் ஒருவர் செருப்பை வீசியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 10 தொகுதிகளில் நேரடியாக மோதுகி்ன்றன. அதில் மத்திய சென்னை தொகுதியும் ஒன்று. இங்கு திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், அதிமுக சார்பில் முகமது அலி ஜின்னாவும் நிறுத்தப்பட்டு்ள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் அதிமுக கூட்டணி கட்சியினரின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் சிங்கை அம்புஜம் என்பவர் முகமது அலி ஜின்னாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் திமுக கட்சியையும், அதன் தலைவர்களையும் ஆவேசமாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த பேச்சால் சாலையோரம் சென்று கொண்டிருந்த திமுக தொண்டர் விஜய ஜம்பு என்பவருக்கு கோபம் ஆனது.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல், தனது காலில் இருந்த செருப்பை எடுத்து அதிமுக பேச்சாளரை நோக்கி வீசினார். அந்த செருப்பு பேச்சாளர் மீது விழுந்தது.

இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த திமுக தொண்டரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X