ஒரு பக்கம் தாக்குதல் - மறுபக்கம் பட்டினி - பரிதவிக்கும் தமிழர்கள்
பட்டினியாலும், சத்தான சாப்பாடு இல்லாததாலும், இப்பகுதியில் தமிழர்கள் எலுமபும், தோலுமாய் காணப்படுகின்றனர். பெரும்பாலும் சிறார்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைப் பார்த்தால் ஆப்பிரிக்க நாட்டு குழந்தைகள் போல பரிதாபமாக இருக்கிறது..
இப்போது கஞ்சி மட்டும் வழங்கப்படும் சூழலில், அந்த இடங்களில் சிறுவர்களும் பெரியவர்களும் பெரும் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் மயங்கி விழும் சோகமும் சர்வசாதாரணமாக இருக்கிறது.
இலங்கை அரசு உணவுத் தடையை செயலாக்கி வருவதால் ஏற்பட்டுள்ள அவல நிலை இது.
கூட்டுறவுச் சங்கங்கள் சிலவற்றில் இருக்கின்ற பொருட்களை மக்களுக்கு வழங்கும் பணிகள் நடந்து வருகின்ற போதிலும் கூட, இலங்கைப் படையினரின் தாக்குதலால் இவை வேகமாக நடைபெறவில்லை.
உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் மீதும் படையினர் தாக்குதல் நடத்துவதால் அதிலும் சிக்கி காயடைந்து வருகின்றனர் மக்கள்.
ஆனாலும் வேறு வழியில்லாமல் உயிரைப் பணயம் வைத்து உணவுப் பொருட்களை வாங்க வரிசையில் காத்துக் கிடக்கும் மக்களின் நிலை பெரும் அவலமாக உள்ளது.