பெங்களூரில் ஸ்டார் ஹோட்டல்களில் பன்றி கறிக்கு தடை
மெக்சிகோ, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்த மற்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் நாட்டுக்குள் வரும் விமான பயணிகளை பரிசோதித்து வருகின்றன.
பன்றி காய்ச்சல் பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட மெக்சிகோ தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவில் இருந்து பன்றிகறிகள் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளன. தற்போது இவர்கள் வரிசையில் பிலிப்பைன்ஸ், செர்பியா, உக்ரைன் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.
இதையடுத்து ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பு, பன்றி கறியை சாப்பிடுவதால் ஸ்வைன் ப்ளூ பரவாது. இதனால் பன்றி கறி சாப்பிடுவதை யாரும் தவிர்க்க வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது.
ஆனாலும், பல நாடுகளில் மக்கள் எதற்கு பிரச்சினை என ஒதுங்கி வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல ஸ்டார் ஹோட்டல்களில் பன்றி கறி விற்பனை செய்வது தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் பன்றி கறி விற்பனை படு மந்தமாகியுள்ளது.