For Daily Alerts
Just In
3 தேர்தல் ஆணையர்களும் நாளை தமிழகம் வருகை - மதுரை குறித்து முக்கிய ஆய்வு
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நாளை தமிழகம் வருகின்றனர். மதுரையில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் கொடுப்பதாக குவிந்து வரும் புகார்கள் குறித்து முக்கிய ஆய்வு நடத்தவுள்ளனர்.
தமிழகத்தில் மே 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையர்கள் நவீன் சாவ்லா, குரேஷி, சம்பத் ஆகியோர் நாளை சென்னை வருகின்றனர்.
தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
மதுரையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுதாகவும், மேலும் பல விதி மீறல்களில் திமுகவினர் ஈடுபடுவதாவும் குவிந்துள்ள புகார்கள் குறித்தும் முக்கியமாக ஆய்வு நடத்தப்படவுள்ளது.
Comments
மதுரை தமிழ்நாடு ec arrival வருகை குரேஷி tamilnadu நவீன் சாவ்லா election 2009 தேர்தல் 2009 வாக்காளர் sampath சம்பத் naveen chawla
Story first published: Monday, May 4, 2009, 9:22 [IST]