For Daily Alerts
Just In
பெட்ரோல் பில் கட்ட ரூ.2000 கோடி கடன் கேட்கும் கிங்பிஷர்!!
பாரத ஸ்டேட் வங்கியில் இதற்காக விண்ணப்பித்துள்ளது கிங்பிஷர்.
இந்த விமான நிறுவனம் இதுவரை பயன்படுத்திய பெட்ரோலுக்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.785 கோடி பாக்கித் தொகை செலுத்த வேண்டியுள்ளது.
இந்தத் தொகையை நேரடியாகச் செலுத்தாமல், பாரத ஸ்டேட் வங்கியின் லோன் மூலம் க்ளியர் செய்ய முடிவு செய்தது. மேலும் உடனடி நிதிப் பற்றாக்குறையைச் சரி செயவதற்காக கூடுதல் தொகை தேவைப்படுவதால், அதற்கும் சேர்த்து ரூ.2000 கோடி கடன் கேட்டுள்ளது.
இந்தக் கடனை வழங்க வங்கியும் முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Story first published: Wednesday, May 6, 2009, 14:19 [IST]