For Daily Alerts
Just In
நாமக்கல் எண்ணை ஆலை தீவிபத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
நாமக்கல்: நாமக்கல் அருகே தவிட்டு எண்ணை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தவிட்டு எண்ணை ஆலை இருக்கிறது. இந்த ஆலையில் 2 நாட்களுக்கு முன்பு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 9 தொழிலாளர்களில் 3 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
தீக்காயத்துடன் உயிருக்குப் போராடி வந்த உமேஷ்குமார், ஓம்பிரகாஷ் ஆகியோர் நேற்றும், இன்றும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்த தொழிலாளர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, May 8, 2009, 13:36 [IST]