For Daily Alerts
Just In
நாங்களும் சாமகவும் கூட்டுக் குடும்பம்-கார்த்திக்
களக்காடு: சமத்துவ மக்கள் கட்சியும், நாடாளும் மக்கள் கட்சியும் கூட்டுக்குடும்பம். இதன் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து, நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்து வருகிறார்.
களக்காடு பகுதியில் அவர் பேசுகையில்,
இதுவரை உங்களை ஏமாற்றியவர்களுக்கு நீஙக்ள் தேர்தலில் முடிவு கட்டுங்கள். உங்கள் வாக்கு நல்லதாக அமைய தாமரைக்கு ஓட்டு போடுங்கள்.
சமகவும் நாங்களும் கூட்டு குடும்பம். இதன் ஒற்றுமை பாதுகாக்கபட வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் தனி மனித உரி்மைகள் பாதுகாக்கபடும். நாடு வளர்ச்சி பாதையில் செல்லும். எனவே இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்றார் கார்த்திக்.
Comments
nellai நெல்லை பிரசாரம் கூட்டணி bjp பாஜக campaign சரத்குமார் sarath kumar election 2009 தேர்தல் 2009 karthik lotus தாமரை
Story first published: Friday, May 8, 2009, 14:08 [IST]