இந்தியர்கள் ஒன்றுபட்டால்தான் கோரிக்கைகள் நிறைவேறும் - மலேசிய அமைச்சர் சுப்ரமணியம்
கோலாலம்பூர்: மலேசிய இந்திய வம்சவாளியினர் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் இனிவெறி உள்ளிட்ட கொடுமைகளிலிருந்து விடுபட முடியும். அவர்களது நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும் என மலேசிய மனித வளத்துறை அமைச்சர் எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மலேசிய குடிமக்களான இந்திய வம்சவாளியினர் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் நிறவெறி பிரச்சினைகள் அகலும். நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும்.
பிரதமர் நஜீப் ரஸ்ஸாக்கின் ஒரே மலேசியா கொள்கை நனவாக மலேசிய இந்திய வம்சாவளியினர் பாடுபட வேண்டும்.
மலேசியாவின் மூன்றாவது பெரிய குடியான இந்திய வம்சாவளியினர் ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டால்தான் வெற்றிகளைக் குவிக்க முடியும்.
ஒரே குரலில் கோரிக்கைகளை எழுப்பினால்தான் இந்திய வம்சாவளியினரின் குரலை மலேசிய அரசு கூர்ந்து கவனிக்கும்.
மலேசியாவின் ரப்பத் துறை முன்னேற்றத்திற்கு மலையாள மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். அவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றார் சுப்ரமணியம்.