For Daily Alerts
Just In
கோரஸ் ஆலையை மூடுகிறது டாடா...3000 பேர் பதவியிழக்கும் அபாயம்!!
வட கிழக்கு இங்கிலாந்தில் உள்ள இந்த தொழிற்சாலைக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆர்டர்கள் தந்துவந்த நான்கு மிகப்பெரிய நிறுவனங்கள் திடீரென தங்கள் அனைத்து ஆர்டர்களையும் ரத்து செய்துவிட்டனவாம். இந்த நான்கு நிறுவனங்கள்தான் கோரஸின் 78 சதவிகித உற்பத்திப் பொருட்களை வாங்குபவர்கள். எனவே வேறு வழியின்றி இந்த ஆலையை மூடுவதாக டாடா ஸ்டீல் அறிவித்துள்ளது.
'இந்த நான்கு வாடிக்கையாளர்களும் எடுத்துள்ள இந்த திடீர் முடிவு துரதிருஷ்டவசமானது, பொறுப்பற்ற செயல்' என கோரஸ் ஸ்டீல் சிஇஓ கிர்பி ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் கோரஸ் ஸ்டீல் நிறுவன ஊழியர்கள்தான். இதனால் 3000க்கும் அதிகமான பணியாளர்கள் உடனடி வேலை இழப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
Comments
Story first published: Saturday, May 9, 2009, 12:46 [IST]