For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக சந்தைகளில் ஏற்றம் - மும்பை சென்செக்ஸ் உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: உலக பங்குச் சந்தைகளில் இன்று ஏற்ற நிலை காணப்பட்டது. இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தையிலும் சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்ந்தது.

இன்று காலை தொடக்க வியாபாரத்தின்போது சென்செக்ஸ் 167.36 புள்ளிகள் உயர்ந்து 12,040.27 ஆக இருந்தது. வர்த்தகத்தின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே இந்த உயர்வு ஏற்பட்டது.

சிறிய இடைவெளிக்குப் பின்னர் சென்செக்ஸ் மீண்டும் 12 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 51.80 புள்ளிள் உயர்ந்து, 3645.25 ஆக இருந்தது.

அமெரிக்க சந்தை மற்றும் பிற ஆசிய சந்தைகளில் ஏற்ற நிலை காணப்பட்டதால் அதன் விளைவு மும்பைச் சந்தையிலும் எதிரொலித்ததாக பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் நாளை தேர்தல் முடிவுகள் வரவுள்ளதால் பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X