For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு 2 பில்லியன் உலக நிதியத்தின் கடனுதவிக்கு அமெரிக்கா எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

Hillary
வாஷிங்டன்: இலங்கையில் மிகப் பெரிய, கொடிய மனிதாபிமான நெருக்கடி நிலவி வரும் நிலையில், அந்த நாட்டுக்கு உலக நிதியம் (ஐ.எம்.எஃப்) 2 பில்லியன் கடனுதவியை அளிப்பது குறித்து பேசுவது பொருத்தமானதல்ல என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

இதனால் உலக நிதியத்தின் மிகப் பெரிய கடனுதவி இலங்கைக்குக் கிடைக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

ஏற்கனவே சமீபத்தில் இங்கிலாந்தும், இலங்கைக்கு கடனுதவி தரக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கடனை இலங்கை அரசு பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஹில்லாரி கிளிண்டன், இலங்கையில் தற்போது மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து அமெரிக்கா பெரும் கவலையுடன் உள்ளது. அங்கு போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்.

இந்த நேரத்தில் இலங்கைக்கு மிகப் பெரிய அளவிலான கடனுதவியை உலக நிதியம் தருவது குறித்து யோசித்து வருவது பொருத்தமற்றதாகும்.

கடன் தருவதற்கு இது ஏற்ற நேரமல்ல. போரை முடிவுக்குக் கொண்டு வந்து பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய நேரம் இது.

போரை நிறுத்தி விட்டு, பிறகு அங்கு என்ன மாதிரியான நிவாரண உதவிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து கணக்கெடுக்கப்பட வேண்டும் என்றார் ஹில்லாரி.

உலக நிதியத்தின் கடனுதவிக்கு அமெரிக்காவும், இங்கிலாந்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் இலங்கைக்கு திட்டமிட்டபடி நிதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X