வென்றார் திருமா-வேலூரில் ஐயுஎம்எல் வெற்றி
சென்னை: சிதம்பரம் தனி தொகுதியில் பாமகவின் பேராசிரியர் பொன்னுச்சாமியை வீழ்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார்.
சிதம்பரம் தொகுதியில், திருமாவுக்கும், பொன்னுச்சாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் ஆரம்பத்தில் பொன்னுச்சாமி முன்னிலையில் இருந்தார். பின்னர் திருமா முன்னணிக்கு வந்தார்.
கடும் இழுபறியின் இறுதியில் திருமாவளவன், 99 ஆயிரத்து 414 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
திருமாவளவன் பெற்ற வாக்குகள் - 4,28,516.
பொன்னுச்சாமி பெற்ற வாக்குகள் - 3,29,102.
ஏற்கனவே இத்தொகுதியில் இருமுறை போட்டியிட்டுள்ள திருமாவளவன் முதல் முறையாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
வேலூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றி:
வேலூர் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தக்க வைத்துக் கொண்டுள்ளது.
வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அப்துல் ரகுமான் போட்டியிட்டார். திமுக சின்னத்தில் இவர் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து பாமக சார்பில் வாசு போட்டியிட்டார். இந்த போட்டியில், அப்துல் ரகுமான், 1 லட்சத்து 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் வேலூர் தொகுதியை முஸ்லீம் லீக் தக்க வைத்துக் கொண்டுள்ளது.