விருதுநகரில் கூடுதல் வாக்குகள்-முடிவு நிறுத்தி வைப்பு
விருதுநகர்: விருதுநகரில் கூடுதலாக 25 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளதால் அங்கு முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் தொகுதியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் இடையே நேரடிப் போட்டி நிலவியது.
கடும் இழுபறியாக இருந்து வந்த நிலையில் இறுதியில், 15,764 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக் தாகூர் வென்றதாக அறிவி்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஒரு வாக்குச் சாவடியில் மொத்த வாக்குகளை விட கூடுதலாக 25 ஆயிரம் வாக்குகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ப.சிதம்பரம் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைகோ தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்ட விருதுநகரில் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக கண்டுபிடிக்கு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.