For Daily Alerts
Just In
நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் உடல் புதைப்பு!
அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்திலேயே உடல் புதைக்கப்படவுள்ளது.
அவரது உடலை தனியாகப் புதைக்காமல் அங்கு கிடைத்த மற்ற உடல்களோடு சேர்த்து புதைக்கவுள்ளதாகவும் இலங்கை அறிவித்துள்ளது.
இந்த உடலை பிரபாகரன் உறவினர்கள் யாருமே இதுவரை சொந்தம் கொண்டாடவில்லை. இதுபோன்ற மிக முக்கியமான தலைவரின் உடலை அவசர அவசரமாக புதைக்க வேண்டியதன் காரணம் என்னவென்பதும் மர்மமாகவே உள்ளது.
பிரபாகரன் உடலைப் பார்க்கக் கூட வேறு சர்வதேச ஊடகங்களோ, நடுநிலையாளர்களோ இதுவரை அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் புதைக்கப்பட்ட இடத்துக்கென்று தனியான அடையாளம் எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக இப்படி கூட்டாக புதைக்கவுள்ளது இலங்கை ராணுவம்.
Comments
Story first published: Wednesday, May 20, 2009, 16:59 [IST]