For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்யம் நிறுவனத்தைவிட்டு வெளியேறும் வாடிக்கையாளர்கள்!

By Staff
Google Oneindia Tamil News

Sathyam
ஹைதராபாத்: சத்யம் நிறுவனம் டெக் மஹிந்திராவின் கைகளுக்குப் போய்விட்டதால், அதன் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் தொடர்ந்து இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது பல முக்கிய வாடிக்கையாளர்கள் சத்யம் நிறுவனத்தைவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

வங்கித் துறையின் முக்கிய வாடிக்கையாளரான ஈரோநெட், அஜிலெண்ட் மற்றும் லோவ்ஸ் நிறுவனம் ஆகிய இரு முக்கிய வாடிக்கையாளர்களும் சத்யம் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்காமல், வேறு நிறுவனங்களுக்கு பணிகளை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக அஜிலெண்ட் நிறுவறும் தற்போது சத்யத்துக்கு வழங்கிய ஒரு முக்கிய புராஜக்டையே ரத்து செய்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் வெளியேறியதால் பெரும் இழப்பு வரும் நாட்களில் ஏற்படும் என்பது உண்மைதான் என சத்யம் நிறுவனமும் கூறியுள்ளது.

இன்னொரு பக்கம், சத்யம் நிறுவனத்தில் தேவைக்கும் அதிகமான பணியாளர்கள் இருப்பதாகக் கூறி அவர்களை பணிநீக்கம் செய்வதில் மும்முரமாக உள்ளது நிர்வாகம்.

அதேநேரம், டெக்மஹிந்திராவின் சில முக்கிய புராஜக்டுகளைச் செய்ய பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், சத்யம் பணியாளர்களை டெக் மஹிந்திராவுக்கு மாற்றும் வேலையும் நடப்பதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X