63 அமைச்சர்களுடன் மன்மோகன் சிங் நாளை பதவியேற்பு
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு நாளை மாலை 5.30 மணிக்கு 63 அமைச்சர்களுடன் நாளை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்கிறது.
திமுக, மம்தா ஆகியோருக்கும் காங்கிரசுக்கும் இடையே அமைச்சர் பதவிகள் தொடர்பாக பிரச்சனை நீடித்து வரும் நிலையில் நாளை இந்தப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் நடந்து வருகின்றன.
மாலை 5.30 மணிக்கு பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்கிறார். அவருடன் 63 அமைச்சர்கள் பதவியேற்பார்கள்.
லாலுவுக்கு மீண்டும் பதவி?:
இதற்கிடையே ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி தருவது குறித்தும் காங்கிரஸ் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பிகாரில் கடும் தோல்வியடைந்த அவர் மத்திய கூட்டணிக்கு நிபந்னையற்ற ஆதரவு தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதரவு தந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி இல்லை என்று காங்கிரஸ் என்று காங்கிரஸ் கூறியிருந்தது.
இந் நிலையில் அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல மதசார்பற்ற ஜனதா தளமும் நிபந்தனையற்ற ஆதரவு தந்துள்ள நிலையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்கிறார்கள்.