For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் பகத் சிங் படம் அவமதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மேலஅனுப்பானடியில் மாவீரன் பகத்சிங் படத்தின் மீது பெயிண்ட் அடித்து அவமதித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஸ்டாலின், செயலாளர் நரசிம்மன் ஆகியோர் கூறுகையில்,

இந்தியா முழுவதும் மாவீரன் பகத்சிங் உருவம் பொறித்த கரும்பலகைகளை வைத்து மக்களுக்கான அடிப்படை கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்லும் பணியில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில், சங்கத்தின் முனிச்சாலை பகுதிக்குழு சார்பில் மேலஅனுப்பானடி வள்ளுவர் காலனியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் பலகையில் உள்ள மாவீரன் பகத்சிங் படத்தின்மீது மர்ம நபர்கள் சிலர் பெயிண்ட் அடித்து அவமதித்துள்ளனர்.

இத்தகைய செயலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் உடனே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X