கருணாநிதியுடன் நாராயணன் திடீர் சந்திப்பு - ஆலோசனை
விடுதலைப் புலிகளுடனான மோதல் முடிவுக்கு வந்ததாக ராஜபக்சே அறிவித்ததைத் தொடர்ந்து நாராயணன், வெளியுறவுச் செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோர் கொழும்பு சென்றனர்.
அங்கு ராஜபக்சேவை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் நாராயணன், முதல்வர் கருணாநிதியை சந்தித்து தனது பயணம் குறித்து விளக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை செல்வதற்கு முன்பு கருணாநிதியை நாராயணன் சந்தித்துப் பேசியிருந்தார்.
இருப்பினும் இலங்கை சென்று வந்த அவர் முதல்வரை சந்திக்கவில்லை. அரசமைப்பு குழப்பம் நிலவி வந்ததால் அவர் சந்திக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சென்னை வந்தார் நாராயணன். இரவு எட்டரை மணியளவில் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் நாராயணன். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
இலங்கை பயணம், ராஜபக்சே என்ன கூறினார் என்பது குறித்து கருணாநிதியிடம், நாராயணன் விளக்கியதாக தெரிகிறது.