For Daily Alerts
Just In
ராமலிங்க ராஜு காவல் நீட்டிப்பு
ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு மற்றும் ஆறு முக்கிய முன்னாள் சத்யம் அதிகாரிகள் இன்று 15-வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களது நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு அதிகரிப்பதாகக் கூறி, சிறையிலடைக்குமாறு கூறினார் நீதிபதி.
மீண்டும் அனைவரையும் சஞ்சாலகுடா சிறைக்கு அழைத்துச் சென்றனர் போலீசார்.
ஜனவரியில் கைது செய்யப்பட்டதிலிருந்து இவர்களுக்கு காவல் நீட்டிக்கப்படுவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் இறுதிக்குள் இந்த வழக்கில் மோசடி செய்யப்பட்ட தொகை அளவை வெளிக் கொணர்வதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் மே மாத இறுதியை நெருங்கிய நிலையிலும், இதுவரை ராஜுக்கள் மோசடி செய்த பணம் எங்கே உள்ளது, என்ன ஆனது என்பது பற்றியும் வெளிப்படையான அறிக்கை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, May 27, 2009, 17:50 [IST]