For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் மேலும் 300 பங்குகள் திறக்கும் இந்தியன் ஆயில்

By Staff
Google Oneindia Tamil News

Indian Oil Corporation
கொழும்பு: போர் முடிந்ததால் இலங்கை வடக்கு கிழக்கில் 300 பெட்ரோல் பங்குகள் திறக்கிறது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்.

இத்தகவலை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இலங்கை ஏஜென்ஸி பணியாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பெட்ரோலியத் தேவைகளைப் பெருமளவு பூர்த்தி செய்வது இந்தியன் ஆயில் நிறுவனமே. தற்போது இலங்கை முழுவதும் 150 பெட்ரோல் பஙகுகள் இயங்கி வருகின்றன.

வடக்குப் பகுதியில் நீண்ட காலமாகவே பெட்ரோல்-டீஸல் சப்ளை கிடையாது. அங்குள்ள வாகனங்கள் பெரும்பாலும் தாவர எண்ணெய் மற்றும் மண்ணெண்ணையிலேயே இயங்கி வந்தன. அதற்கேற்ப வாகனங்களை மாற்றிக் கொண்டனர் வடக்குப் பகுதி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதால், பெட்ரோல் நிலையங்களே இல்லாத வடக்குப் பகுதியிலும், கிழக்கு மாகாணத்தின் உள்ளடங்கிய பகுதியிலும் புதிய நிலையங்கள் திறக்க இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி ஒவ்வொரு நிலையத்துக்கும் 20 மில்லியன் ரூபா (இலங்கைப் பணம்) வீதம் இத் திட்டத்துக்கு 6 பில்லியன் ரூபாவை இந்தியன் ஆயில் நிறுவனம் ஒதுக்கியுள்ளதாக இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X