For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல்-டீஸல் விலை: இனி அரசு கட்டுப்பாட்டில் இருக்காது!

By Staff
Google Oneindia Tamil News

Petrol
டெல்லி: பெட்ரோல் டீஸல் விலை ஒழுங்கு முறைப்படுத்துவதை அடுத்த ஆறு மாதங்களுக்குள் ரத்து செய்வோம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.

இனி சர்வதேச சந்தையில் நிலவும் சூழலுக்கேற்ப இந்தியாவிலும் பெட்ரோல்-டீஸல் விலை மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு தாறுமாறாக உயர்ந்து பேரலுக்கு 150 டாலர் வரை போனது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் - டீஸலுக்கான விலை நிர்ணயத்தை அரசு ஒழுங்குமுறைப்படுத்தியது. கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்தது. மண்ணெண்ணெய், எரிவாயுவுக்கு மானியம் அளித்து கட்டுப்பாடான விலையில் மக்களுக்கு வழங்கியது.

இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலராகக் குறைந்துவிட்டது. மேலும் குறையவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் ரிலையன்ஸ் நிறுவனம் கோதாவரி முகத்துவாரத்தில் தனது எரிவாயு உற்பத்தியை முழு அளவில் தொடங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இனி பெட்ரோல் - டீஸல் விலை சர்வதேச நிலைக்கேற்ப நிர்ணயமாகும் வகையில் அரசு தனது கட்டுப்பாட்டை தளர்த்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் பெட்ரோல் - டீஸல் விலை நிர்ணயம் மீண்டும் எண்ணெய் நிறுவனங்களின் கைகளுக்கே வந்துள்ளது.

இப்போதைய நிலைப்படி பார்த்தால், அரசு தனது கட்டுப்பாட்டை தளர்த்துவதால் பெட்ரோல் விலையில் ரூ.2 உயரவும், டீஸல் விலையில் 30 காசு குறையவும் வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X