எந்நேரமும் திவாலாகும் ஆபத்து: 1 டாலருக்கும் கீழே சரிந்த ஜிஎம் பங்குகள்!
ஜி எம் நிறுவனத்தின் 76 வருட வரலாற்றில் அந்த நிறுவனப் பங்குகள் விலை 1 டாலருக்கும் கீழே சரிந்துவிட்டது இதுவே முதல் முறை.
எந்த நேர்த்திலும் திவால் நோட்டீஸ் கொடுக்கும் மோசமான சூழலில் ஜிஎம் நிறுவனம் இருப்பதால், கிடுகிடுவென அதன் பங்கு மதிப்பும் சரிந்து வருகிறது. நேற்று மட்டும் 22 சதவிகிதம் விலை குறைந்த இந்தப் பங்குகள் இப்போது 87 சென்டுகளுக்க வந்திவிட்டது.
வரும் வாரத்தில் இந்த நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுத்துவிடும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்து வருவது அதன் முதலீட்டாளர்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கெனவே 1 லட்சம் பணியாளர்கள், 4000 முகவர்கள் இந்த நிறுவனத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், அதிக நிதி கேட்டு இந்த நிறுவனமும் கிறிஸ்லரும் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் 16 பில்லியன் டாலர்களை அமெரிக்க ஆட்டோ மொபைல் துறையின் மீட்சிக்காக ஒதுக்கிய ஒபாமா, அதற்குமேல் நிதி ஒதுக்குவது சாத்தியமில்லை என்று கூறிவிட்டதால், திவால் நோட்டீஸ் முடிவுக்கு ஜிஎம் வந்திருப்பதாகத் தெரிகிறது.