2020ல் மின்தேவை 3 லட்சம் மெகா வாட் ஆகும்-அனில்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாட்டின் மின் தேவை மிக வேகமாக அதிகரித்து வருவதால் அணுசக்தி மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அணுசக்தி மின் உற்பத்தித் திட்டங்கள் 3 கட்டமாக அமல்படுத்தப்படும். முதல்கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் தாரப்பூரில் 2 கன நீர் அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
2வது கட்டமாக கல்பாக்கத்தில் 3 கன நீர் அணு உலைகள் அமைக்கப்படும். இவை ஒவ்வொன்றும் தால 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
3வது கட்டமாக தோரியம் மூலம் மின் உற்பத்தி செய்யும் அணு உலைகளை அமைக்கப்படும்.
இத் திட்டங்கள் முடிவடைய இன்னும் 6 ஆண்டுகள் வரை ஆகலாம்.
அணுசக்தி மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு மெகாவாட் மின்உற்பத்தி செய்ய ரூ.6 கோடி முதல் ரூ.7 கோடி வரை செலவாகும்.
2020ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மின் தேவை 3,00,000 மெகா வாட்டாக இருக்கும். இதில் அணுசக்தி மூலம் 10 சதவீதம் வரை மின்சாரத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.