For Daily Alerts
Just In
ரூ.2365 கோடியில் போர்டு இந்தியா விரிவாக்கத் திட்டம்!
இதனால் இந்திய மார்க்கெட்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் மும்முரமாக உள்ளன அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனங்கள்.
இந்தியாவில் ஏற்கெனவே வலுவாகக் காலூன்றி உள்ள போர்டு நிறுவனம் இப்போது தொழிற்சாலைகளை மேலும் விரிவாக்கம் செய்யும் முனைப்பில் உள்ளது.
அதன் ஒரு கட்டமாக, சென்னைக்கு அருகில் உள்ள தங்கள் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட ஒப்பந்தம் தமிழக அரசு - போர்டு நிறுனத்துக்கிடையே அடுத்தமாதம் கையெழுத்தாக உள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் ரூ.2365 கோடியை கூடுதலாக போர்டு முதலீடு செய்யும். கடந்த மாதம்தான் தங்கள் மறைமலை நகர் தொழிற்சாலையில் புதிதாக டீஸல் எஞ்ஜின் தயாரிக்கும் பிரிவைத் துவங்கியது போர்டு.
Story first published: Sunday, May 31, 2009, 14:46 [IST]