For Daily Alerts
Just In
நெஞ்சுவலி- மருத்துவமனையில் இளங்கோவன்
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈரோட்டில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் கஸ்தூரி வீதியிலுள்ள தனது வீட்டில் வழக்கம் போல் பணிகளை பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் நெஞ்சுவலி லேசாக இருந்துள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்பு, மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments
Story first published: Tuesday, June 2, 2009, 14:40 [IST]