தீண்டாமை இல்லாத கிராமம்-அரசு பரிசு!
நாமக்கல்: தீண்டாண்மை இல்லாத கிராமமாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுநல்லிக் கோவில் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசின் பரிசை தட்டிச் சென்றுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக மக்கள் சுதந்திரமாக பொதுக் கோவில், குடிநீர் கிணறு, கடைகள், ஹோட்டல்களைப் பயன்படு்த்த அனுமதிக்கும் கிராமத்தை, தீண்டாமை ஒழிக்கப்பட்ட கிராமமாக அரசு அறிவிக்கிறது.
இந்த கிராமத்திற்கு ரூ.1 லட்சம் அரசு பரிசு வழங்கி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இத்தகைய கிராமத்தை தேர்வு செய்ய மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் திட்ட அலுவலர் சாமுவேல் இன்பதுரை மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து கடைசியில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சிறுநல்லிக் கோவிலை தீண்டாமையை கடைபிடிக்காத கிராமமாக தேர்வு செய்தனர்.
இதையடுத்து, இந்த கிராமத்துக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் பரிசு அளித்துள்ளது.
இதற்கான காசோலையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம் சிறுநல்லிக்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிசாமியிடம் வழங்கினார்.