ஐசிஐசிஐ அரை சதவீத வட்டிக் குறைப்பு
மும்பை: தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ தனது முதன்மைக் கடன்களுக்கான வட்டியில் மேலும் அரை சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த வட்டிக் குறைப்பு காரணமாக இதுவரை 16.25 சதவீதமாக இருந்த வட்டி இனி 15.75 சதவீதமாக இருக்கும்.
ரிசர்வ் வங்கியின் பல்வேறு நிதிச் சலுகைகளுக்குப் பிறகும் வங்கிகள் அதில் 25 சதவீதம் அளவுக்குக் கூட குறைக்க முன்வரவில்லை என்ற கடும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுகுறித்து வங்கிகளுடன் பேசப் போவதாக சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தது நினைவிக்கலாம்.
குறிப்பாக இந்திய தனியார் வங்கிகளில் மிக அதிக வட்டி விதிக்கப்படுவது ஐசிஐசிஐ வங்கியில்தான் என்று குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் தனது வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் அளவுக்கு அதாவது அரை சதவீதம்ம் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது ஐசிஐசிஐ.
ஆனால் அரசு அறிவித்து நிதிச் சலுகை மக்களுக்கு முழுமையாகச் சேரவேண்டுமானால் இன்னும் 6 சதவீதம் வரை தனியார் வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்தாக வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.