For Daily Alerts
Just In
6,000 மின் வாரிய ஊழியர்கள் பணி நிரந்தரம்
மின்வாரியத்தில் 21,600 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் படிப்படியாக நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு கடந்த 2007ம் ஆண்டு அறிவித்தது.
முதல்கட்டமாக, அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6,000 தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர்.
இரண்டாம் கட்டமாக, மேலும் 6,000 ஊழியர்களை நிரந்தரமாக்கும் உத்தரவு முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்த நாளை ஒட்டி நேற்று பிறப்பிக்கப்பட்டது.
இதன் அடையாளமாக 86 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தர உத்தரவை மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வழங்கினார். மீதியுள்ள ஊழியர்களுக்கு இந்த வார இறுதிக்குள் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவால், மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ. 40 கோடி கூடுதலாக செலவாகும்.
Story first published: Thursday, June 4, 2009, 9:12 [IST]