For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலைக்கு போக சொன்னதால் சிறுமி தீக்குளித்து பலி

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: வீட்டில் வேலைக்கு போக சொன்னதால் மனமுடைந்த சிறுமி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம், கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பந்தபுளி கிராமத்தை சேர்நதவர் முருகன். இவரது மகள் கவிதா. சிறுமி கவிதாவுக்கு படிப்பு சரியாக வராததால் அவரது பாட்டிக்கு துணையாக பாட்டியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சிறுமி கவிதாவை அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலைக்கு சேர்த்தனர். வேலை கடினமாக இருந்ததால் கவிதா வேலைக்கு செல்ல மறத்துவிட்டார். இதையடுத்து அந்த சிறுமியை சத்தம் போட்டு வேலைக்கு அனுப்பியுள்ளார்கள்.

இதனால் அவர் இரண்டு நாள் வேலைக்கு போயுள்ளார். அதன் பின்னர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் படுத்து தூங்கி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிதாவின் பாட்டி அவரை சத்தம் போட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த கவிதா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X