கிருஷ்ணாவிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழகம் கோரிக்கை
சென்னை: சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திர அரசின் உதவியை தமிழகம் நாடியுள்ளது.
தலைநகரான சென்னையி்ன் ஒரு நாள் குடிநீர் தேவை 65 கோடி லிட்டர்.
கடந்த 1983ல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆந்திரா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏப்ரல் துவக்கத்தில் இருந்து திறந்துவிடுகிறது.
கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு தேவையான நீர் கண்டலேறு நீர்த்தேக்கத்துக்கு கொண்டு வரப்பட்டு பின்பு அங்கிருந்து சென்னைக்கு திரும்பிவிடப்படுகிறது.
மொத்தம் 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் தற்போது 6.1 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. இந் நிலையில் தற்போது தமிழக அரசு, ஆந்திராவிடம் தண்ணீரை திறந்துவிடுமாறு கேட்க இருக்கிறது.
ஆந்திர அரசு இதற்கு சம்மதிக்கும் பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் சென்னையின் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியும் என அரசு அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.