For Daily Alerts
Just In
துணை சபாநாயகராக கரியா முண்டா தேர்வு
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில மூத்த பாஜக எம்பியான கரியா முண்டா இன்று மக்களவை துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். குரல் ஓட்டு மூலம் அவர் தேர்வானார்.
சபாநாயகராக காங்கிரஸைச் சேர்ந்த மீரா குமார் தேர்வான நிலையில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க் கட்சியான பாஜகவுக்கு விட்டுத் தரப்பட்டது.
இந் நிலையில் இன்று துணை சபாநாயகர் தேர்தல் நடந்தது. இதற்கான தீர்மானத்தை பாஜக தலைவர் அத்வானி முன்மொழிய, அக் கட்சியின் மூத்த தலைவரான ராஜ்நாத் சிங் வழிமொழிந்தார்.
அதே போல அவரது பெயரை காங்கிரஸ் சார்பி்ல் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திமுக சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.
இதையடுத்து குரல் ஓட்டு மூலம் இன்று நடந்த தேர்தலில் அவர் துணை சபாநாயகராகத் தேர்வானதாக மீரா குமார் அறிவித்தார்.
கரியா முண்டா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
Comments
Story first published: Monday, June 8, 2009, 16:06 [IST]